பக்கம் எண் :

140ஆத்மாநாம் படைப்புகள்

விடு*

இந்த மரங்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை எரித்துவிடு
இந்த மலர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் புதைத்துவிடு
இம்மனிதர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை வாழ விடு
இச்சிட்டுக் குருவிகளுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் பறக்க விடு

*இந்தக் கவிதையை 1981ஆம் ஆண்டு தர்மபுரியில் இருந்து ஹோகேனக்கல்நீர்வீழ்ச்சிக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஆத்மாநாம் எழுதினார்.