கேட்கப்படுவதும் கேட்கப்படாததும் உலகத்திடமிருந்து நான் எதிர்பார்ப்பது அன்பை கருணையை மனிதாபிமானத்தை புரிந்துகொள்ளுதலை உண்மை வெளிப்பாட்டை இன்னும் பிற நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய் என்கிறது மனித இனம் நான் வேலையைக் கேட்கவில்லை உணவைக் கேட்கவில்லை குடியிருப்பைக் கேட்கவில்லை கேட்பதெல்லாம் ஒன்றுதான் நான் வேறு நீ வேறு என்பது பொய் நானும் நீயும் ஒன்றுதான் என்பதை உணர் என்றுதான் |