இன்னும் புறாக்கள் பறந்து போகும் கழுத்திலே வைரத்தோடு கிளிகளும் விரட்டிச் செல்லும் காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும் தானியம் தேடிக்கொண்டு குருவிகள் கிளுகிளுப்பூட்டும் கிளைகளில் தவழ்ந்துகொண்டு பாசிக் கறை படர்ந்த தாமரைக் குளத்து நீரில் நீளக்கால் மெல்ல அளையும் கரை நிழல் கீழமர்ந்து பழங்களைக் கடித்துத் தின்ற அணில்களும் அவ்வப்போது கேள்விகள் கேட்டாற்போலத் தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் பூசாரி குடத்தில் நீரெடுப்பார் மந்திரம் சொல்லும் வாயால் தம்மையே நொந்துகொண்டு கற்புடைப் பெண்டிர்கூட்டம் அக்கரைக் கற்கள் மீது ஊர்க்கதை பேசிக்கொண்டு துணிகளைத் துவைத்துச் செல்லும் வயல்களுக்கப்பால் இருந்த சூரியன் மேலே சென்றான் எருமைகள் ஓட்டிச் சென்ற சிறுவனின் தலையில் வீழ்ந்தான் |