பக்கம் எண் :

170ஆத்மாநாம் படைப்புகள்

மறுபக்கம்

தரையில் நான்
  சுவரில் பல்லி
தொங்கும் விளக்கால்
 ஆடும் நிழல்கள்
மங்கும் ஒலிகள்
  மாலை இருளில்
தொலைவில் கேட்கும்
  குழந்தையின் அழுகை
இருளில் கேட்கும்
  குழாயின் ஒழுகல்
அறைக்குள் காற்றில்
  வண்ணப் பூச்சிகள்
குறுக்கே பறக்கும்
  வினாடிப் பிளவில்
அணைக்கும் இருளில்
  சிரித்துக் கொண்டு
வானில் மிதக்கும்
  கோலப் புள்ளிகள்
இடப்பெயர்ச்சி
  சுழற்சியின் நடுவே
தரையில் பல்லி
  சுவரில் நான்