பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்223

6. அவனவன் உலகம் அந்தரங்கமானது
அந்த உலகில் ஒரு உன்னத வினாடி
அந்த உலகில் ஒரு துக்க வினாடி
அவை அந்தரங்கமானவை.
யெவ்டுஷெங்கோ
(நா. ஜெயராமான்)
7. செல்லப்பா சொல்லிட்டார்
நாப்பா போட்டுட்டார்.
ஜரதுஷ்டிரன்
8. அமைதி இருந்ததா? அவன் அதற்காக
போர் நடந்ததா? அவன் போயிருந்தான்.
W. H. ஆடன்
(அரங்கநாதன்)
9. அவரவர் பசுக்களை
ஒழுங்சில் வைக்கவும்
அநாதைப் பசுக்களை
அரச காக்கும்.
ஆர். வி. சுப்பிரமணியன்
10. உன் வாழ்க்கையே ஒரு அற்புதப் பரிசு.
ஜோசப் ப்ராட்ஸ்கி
(பிரம்மராஜன்)
11. சுகமான புல்வெளியென்பது -நான்
ஆமென்பது -அவள்.
ரா. சீனிவாசன்
12. நம் மேல் மீண்டும் கட்டுக் கதைகள் எரிகின்றன
முதல் காற்றில் அவற்றின் இலைகள் விழும்.
யுங்கரெட்டி
(ஆத்மாநாம்)
13. நான் கனவு காண்கிறேன் என்
தார்மீகச் சாம்பல் சுமையுடன்.
பாப்லோ நெரூடா
(மயானஸ்வாமி)
14. உலகம் வர்ணங்களை மயமானது
வான் முதல் மண் வரை
உமாபதி
15. என் சுவாச கோளங்களை
மேகம் நிறைக்கையில்
கணிதங்கள் அற்றுப் போகும்.
ஆனந்த்
16. காட்சியே மறையும் விரைந்து;
சாட்சியாய் ஒரு சொல் மட்டுமே
நானென்று நிற்கும்.
பிரம்மராஜன்
17. ஒவ்வொருவரும் ரொம்பவும் நேசத்துடனே
சந்தோஷமாக அசைகிறார்கள் உடம்பெல்லாம்
ஒளியாக.
ஆர். ராஜகோபாலன்
18. எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?
பசுவய்யா