| டெலிபோன்கள் புலம்புகின்றன தீயணைக்கும் வண்டிகள் ஊளையிட்டுக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாய் ஒடுகின்றன. வால்கள் இயங்கிப் பிளிறுகின்றன துதிக்கை உருவில் நீரை உமிழ்கின்றன சுடர்கள் தணிந்தடங்கவில்லை.
| |
| | சி. நாராயணரெட்டி |
52. | எங்கள் தேவை துண்டுத் துணி அல்ல; முழு ஆடை பருக்கைகளல்ல; முழுச்சாப்பாடு ஒரு வேலை மட்டுமல்ல; முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை நிலக்கரி, தாதுப் பொருள்கள், உலோகக்கனி அத்தனையும் எங்களுக்குத் தேவை. எல்லாவற்றையும் விட மேலாக நாட்டின் ஆளும் அதிகாரமும் எங்களுக்குத் தேவை. நல்லது இவ்வளவும் எங்களுக்குத் தேவை. ஆனால் நீங்கள் கொடுப்பது என்ன?
| |
| | பெர்டோல்ட் ப்ரெக்ட் |
53. | மகனே, குழந்தாய் எப்படிச் சிரிப்பது என்று எனக்குக் காட்டு. ஒரு காலத்தில் நான் உன்னைப் போல் இருந்தபோது எப்படிச் சிரித்தேன் என்று எனக்குக் காட்டு, மகனே.
| |
| | கேபிரியல் ஓகாரா (நைஜீரியா)
|
54. | இயேசுவானவர் ஒரு கருப்பனாகத் திரும்பி வருவாரானால் அது நல்லதல்ல. ... ... ... ஆனால் இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்- இயேசுவே! நீர் நிச்சயமாக மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர்
| |
| | லேங்ஸ்டன் ஹ்யூஸ் |
55. | என்னுடைய மக்களுடன் பேசிப்பார்க்கின்றேன் என்னுடன் பேசி வந்ததாகச் சொல்லுகின்றார்கள்.
| |
| | எஸ். வைத்தியநாதன் |