பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்41

இசை/ஓசை

வயலினில்
ஒரு நாணாய்
எனைப் போடுங்கள்
அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப் பார்ப்போம்

அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக

எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தபடி

உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது

கூர்ந்து கேட்டால்

அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை