பக்கம் எண் :

42ஆத்மாநாம் படைப்புகள்

என்ற கேள்வி

பார் அந்த முதலை
அதன் பளிச்சிடும் ஒளியில்
ஒழுகுங்கள் சிறிது நேரம்
அதன் வர்ணங்கள் ஒவ்வொன்றும்
அதனதன் இடத்தில் உள்ளது
ஒரு மரம் என்றால்
அது பெயர்த்தெடுத்து வந்து
வைத்த மாதிரி இருக்க வேண்டும்
இங்கே
காலம் அகாலம் என்ற பேச்சே கிடையாது
நிஜம்
அதுதான் நமக்கு வேண்டும்
அதன் கற்பனைகள் வேண்டும்
வடிவங்களில் மாற்றமிருக்கலாம்
பொருளில் மாற்றம் கூடாது
முற்றும் முழுதான பொருள் வேண்டும்
இது சாத்தியமா
என்ற கேள்வி எழ வேண்டும்
பார்ப்பது நிஜம்தான்
என்று தோற்றம் அளிக்க வேண்டும்
அப்பொழுது
நீங்கள் பார்ப்பது ஓவியம்
எனினும் என்ற பிரச்சினைக்கே
அங்கு இடம் கிடையாது