நாளை நமதே கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன் இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது சிந்தனையாளர் சிறு குழுக்களாயினர் கொள்கைகளை கோஷ வெறியேற்றி ஊர்வலம் வந்தனர் தலைவர்கள் மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று மெல்லக் கொல்லும் நஞ்சை உணவாய்ப் புசித்தனர் எளிய மக்கள் புரட்சி போராட்டம் எனும் வார்த்தைகளினின்று அந்நியமாயினர் இருப்பை உணராது இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர் என் ஸக மனிதர்கள் இந்தத் துக்கத்திலும் என் நம்பிக்கை நாளை நமதே |