பக்கம் எண் :

54ஆத்மாநாம் படைப்புகள்

பூச்சுக்கள்

வாழ்க்கைக் கண்ணாடியில்
முகம் பார்த்து
தலை சீவி
பவுடர் பூசி
வெளிக் கிளம்பினேன்
பஸ் ஸ்டாண்டில்
என்னைப் போலவே
ஆண்களும் பெண்களும்
அவரவர் வாழ்க்கைக் கண்ணாடியில்
முகம் பார்த்து
அலங்கரித்து
காத்து நின்றிருந்தனர்
வந்து போய்க்கொண்டிருந்த
வாகனங்களில்
பொது மக்கள்
வேற்றுமை காண இயலாவண்ணம்
உட்கார்ந்துகொண்டும்
நின்றுகொண்டும்
பயணம் செய்துகொண்டிருந்தனர்
என்னுடைய வாகனம் வந்துவிட்டது
இடிபாடுகளுக்கிடையே
நானும்
ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்
எங்கோ ஒரு இடத்தில்
நிலம் தகர்ந்து
கடல் கொந்தளித்தது
ஒரு பூ கீழே தவழ்ந்தது