பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்61

                   III

அற்புதமாய்ப் புலர்ந்த காலை
நீள நிழல்கள்
நிலத்தில் கோலமிட
வண்ணக்கலவையாய் உலகம்
எங்கும் விரிந்து
கெட்டியாய்த் தரை
என் காலடியில்
நிஜம் புதைந்து கிடக்க

                  IV

ஒரு தலைப்பிடாத கவிதையாய்
வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் எனத்
தொடர்ந்த நாட்களை எண்ணினேன்
காலையைத் தொடர்ந்து மாலை
இரவாகும் காலப் புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்

கடற்கரையில்