திரும்புதல் சரக்கென்று உடல்விரித்துக் காட்டும் கற்றாழையின் நுனியிலிருந்து துவங்கிற்று வானம் எங்கெங்கோ அலைந்து திரிந்து திரும்பிற்று மனம் வழக்கம் போல் கடல் மணல் புல்தரை சாலை வாகனங்கள் கோணல் மாணல் மனிதர்கள் திரும்பிக்கொண்டு எங்கிருந்து கப்பல்கள் காத்திருக்கின்றன திரும்பிச் செல்ல நானும் திரும்ப வேண்டும் தினசரியைப் போல ஒவ்வொரு நொடியாக அடுத்த நாள் காலைவரை |