பக்கம் எண் :

86ஆத்மாநாம் படைப்புகள்

மேகம்

வெற்றிடத்தில் பிடிப்பின்றி
மின்னலின் கீறலுக்கும்
இடியின் இறுமலுக்கும்
இடையே தவிப்புற்று...
இறுக்கத்தின் வெம்மையால்
காய்ந்த நிலம் நோக்கிக்
கண்ணீராய்க் கவிழ்ந்தது
உருமாறி...