மழை பொய்த்த மழை இரவு பெய்துவிட்டது காற்றைத் தண்மையாக்கிய மழை உடலை மென்மையாக வருடுகிறது சாலையின் சிறுசிறு பள்ளங்களில் நீர் தேங்கியுள்ளது எங்கள் பூமி செம்மண் ஆனதால் மழை நீரும் காவியேறியுள்ளது காற்று வீச சிறு அலைகள் மெல்லத் தவழ்கின்றன கிணற்றிலும் கொஞ்சம் நீர் பாய்ந்துள்ளது அதன் ஸ்படிகத் தெளிவு என் கண்களைக் கூசச் செய்கிறது ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சூல் கொண்ட மேகங்கள் மண்ணுடன் காதல் கொள்கையில் மழை பிறக்கிறது அதன் ஒவ்வொரு துளியும் எங்களுக்கு உணவு மழையைத் தியானித்து சொற்கள் மூலம் வேண்டுதல் விடுக்கிறோம் மழை நீ நான் இவ்வகிலம் முழுவதும் இன்றைக்கு மழைதான் எம் சிந்தனை இன்றைக்கு மழைதான் எம் கடவுள் |