நான்தான் நான் முருங்கை மரக் கிளையினின்று இலைகள் உதிர்கின்றன வாழ்க்கை நகர்கிறது வானின் நீலத்தைத் தீட்டியவனும் மேகக் கூட்டங்களைச் செதுக்கியவனும் கண் நிறைய மரங்களை அளிப்பவனும் கடலுக்கு வெண் நுரை வழங்கியவனும் மண்ணும் மலையும் புழுவும் பூச்சியும் நான்தான் நான்தான் நான்தான் |