பக்கம் எண் :

248

 

II. உத்தியோக காண்டம்
5. கடைசிப் பட்கா வார பர்வம்

              திரித்துவத்தில் ரண்டாமாள் தெய்வமைந்த னேயானோர்
             நராவடிவாய் வந்துபாரில் மாரணம்பேய் வென்றேதாம்
             மதித்தவர்கள் தம்பவத்தால் வாழ்ந்துயப்பா வந்தீர்ந்தே
             மரித்துயிர்க்க ஏகுமன்னன் மலரடிவாழ்த் தல்செய்வோம்

125. பாடுகள் முன்னறிவிப்பு ( 3 )
மத். 20 : 17 - 19; மாற். 10 : 32 - 34; லூக். 18 : 31 - 34.

1.          திருஅவ தாரன் வேளையே நெருங்க எருசலை செலமன முவந்தே
              திருப்பதி முகமாய்த் தீவிர மொடுமே சிசியரின் முன்னடந் தனரே
              சிறியகூட் டமாயச் சீடரோ பிறகே திகைத்தே பயந்துசென் றனரே
              இருவறு வரையே தாமழைத் தவர்க்கே விளம்கினர் மறுதர மிறைவன்.

2.         செப்புகின் றனன்யான் செவிகொடு மிதற்கே செல்கிறோம் எருசலேம் பதிக்கே
              செப்பிய வனைத்தும் வனுமகற் குறித்தே சீக்கிரம் நிறைவுறு மவணே
              ஒப்புவிப் பரன்றோ இதுநிச நிசமே உத்தமர் திருமனு மகனை
              செப்பமா யவரை மரணவாக் கினைக்குட் தீர்த்துபா ரகாபரி சயரே.

3.        புறக்கணித் தவரை யொப்புக் கொடுப்பார் புறசா தியருட வசமே
            புறசா தியரோ பெரிதவ மதிப்பார் பரிகசித் தடித்துவா ரினாலே
            அருவருப் புறவே துப்பியே யவரை குருசினி லறைந்துகொல் லுவரே
            மரித்தபின் திரிநாள் மரித்தவ ரிடம்நின் றெழும்புவார் மகிமை யுடனே.

4.         அவரிதை யுணர்ந்தா யத்தமே யடைய அருட்குரு தெளிவுடன் உரைத்தும்
            அவைகளி லெதையும் தம்முளத் தினிலே யறிந்துணர் வடையவே யிலையே
            அவைகளின் கருத்தோ அறியா லிதமாய் மறைபொரு ளானதே யவர்க்கே
            அவர்சொலும் விடயம் அர்த்தமோ எதுவும் அறியவே கூடா திருந்தார்.