பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

117

100. வெள்ளை மேனியாய் ! போற்றி. ஒப்பனை
        மேவு மார்பனே ! போற்றி, போற்றி.பூங்
    கள்ள லம்புதண் களவின் நீழலிற்
        கருணை யங்கடற் கடவுள் ! போற்றி.நான்
    உள்ளம் ஒன்றிநின்(று) அடிவ ழுத்திட
        உதவி செய்தவா ! போற்றி. இன்புறத்
    தெள்ளு செந்தமிழ்க் கருவை மாநகர்ச்
        செல்வ ! போற்றி.நின் சீர்கள் போற்றியே.

    (பால்போலும்) வெள்ளிய திருமேனியனே ! வணக்கம்.  ஒப்பனை யம்மை விரும்பிச் சேர்ந்த திருமார்பனே ! வணக்கம், வணக்கம்.  தேன் ததும்புகின்ற மலர்களை யுடைய குளிர்ந்த களா மரத்தின் நீழலில் எழுந்தருளிய அருட்கடலான ஐயனே! வணக்கம்.  நான் மனம் பொருந்தி நிலைத்து (உனது) திருவடிகளைத் துதிக்க (உணர்வு கொடுத்து)அருள் செய்தவனே ! வணக்கம்.  இன்பமுண்டாகும்படி தெளிந்த செவ்விய தமிழ் வழங்கும் திருக்கருவை என்னும் சிறந்த நகரிற் கோயில் கொண்டருளிய (சர்வ) ஐஸ்வரியனே ! (வணக்கம்.)  அளவிடற்காகாத உன்னுடைய நலங்கள் (யாண்டும் என்றும்) புகழப்படுவனவாக.

மேவுதல்-விரும்புதல்.  அலம்புதல்-ததும்புதல்.  ஒன்றி-பொருந்தி.  நின்று-நிலைத்து. வழுத்தல்-துதித்தல். உதவி-அருள்.  ‘ நாவலர் தெள்ளு செந்தமிழ் ’ என்பதும் பாடம்.

    ‘உள்ளம் ஒன்றி நின்று அடி வழுத்திட உதவி செய்தவா ’ என்றது, பொது வகையால் சிவபெருமானைத் துதிக்க உணர்வளித்த திருவருளைக் குறித்தலோடு ; சிறப்புவகையால், சிவபெருமானைத் துதிக்க என்றெடுத்த இந்நூல் இனிது முடியச் செய்த திருவருளையும் குறிக்கும்.  தெளிவும் செவ்வியும் இன்புறுதற்கு ஏதுவாத லால் ‘ இன்புறத் தெள்ளு செந்தமிழ்’ என்றார்.  ‘தெள்ளு