பக்கம் எண் :

6

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    ஒளிப்பிழம்பே! வலிய அருள்செய்து என்னைத் தடுத்தாட்கொண்ட என் உயிர்த்துணையே! (அவாவினால்) தோண்டப்படும் பிறவிக்குழியில் விழுந்து வருந்தும் வருத்தம் அகன்று (யான் உய்யும் நிமித்தமாகத்) திருக்களா நீழலில் எழுந்தருளிய இறைவனே! எமது பெருமானே! (அழியும்) உடலை (ஒருபொருளாகக் கருதிப்) பாதுகாத்துத் திரியும் என்னை உன்னை நினைந்துய்யுமாறு ஏவிய கருணைக்கடலே, உன்னையன்றி வேறொரு தெய்வத்தை யான் காணவேனும் கருதவேனும் கடவேனோ? (கடவேனல்லேன்.)

    ‘பிறவித் தொடுகுழிவீழ் இடரே யகல வலியத் தடுத்தாண்ட துணையே!’ எனக் கொண்டு கூட்டிப் பொருள் உரைப்பினும் பொருந்தும்.

    நகுதக்கனரே’ என்னும் புறப்பாட்டில் (72) ‘அகப்படேனாயின்’ என்னும் தன்வினை ‘அகப்படுத்தேனாயின்’ என்னும் பிறவினைப் பொருளில் வந்தாற்போல ஈண்டும் ‘அகல’ என்னும் தன் வினை ‘அகற்ற’ என்னும் பிறவினைப் பொருளில் வந்ததெனக் கொள்ளினும் எச்சச் சொற்கள் வேண்டாது பொருள் நேரே சென்று இயையும். இவ்வாறு கொள்ளினும் கொள்க.

    ‘தொடுதல்-தோண்டுதல் ; ‘ தொட்டனைத்தூறும் மணற்கேணி’ என வருவது காண்க. ‘தொடுகுழி’ என்பதற்குத் ‘தோண்டப்பட்ட கடல்’ என்று பொருள் உரைப்பாரும் உளர் ; சகரரால் தோண்டப்பட்டது என்பது கருதிப்போலும். குழி என்னும் சொல் கடல் என்னும் அப்பொருட்கு இயையாதாதல் உணர்க.

    அவா என்னும் பாரையால் வினை என்னும் நிலத்தைத் தோண்ட உண்டாம் குழி பிறவிக்குழியாகக் கொள்க. கொள்ளவே, தான் தோண்டிய குழியில் தானே விழுதல்போலத் தனது வினைப்பிறவிக் குழியில் தானே விழ, அறியாமை என்னும் மண்