த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
67 |
கத்தைக் காக்க வரந்தந்தருளும்
முதலாயுள்ள புனிதனே! களாநிழலில் எழுந்தருளிய இறைவனே! அறிவிற் சிறியேனாகிய யான், முன்னமே
தேவரீருக்குத் தொண்டு பட்டொழுகுவேனும் அல்லேன்; சிவஞானியும் அல்லேன்; ஐயோ, உனக்கு எளியேன்
செய்தபிழை கோடி யுள்ளன வானாலும் என்னைப் பாது காத்தல் உன் கடனாம்.
உரவோர்-ஞானிகள், (உரம்-அறிவு).
புர-காப்பாற்று.
ஈசன் திருவடி யெய்தற்கு
அன்பும் அறிவும் இன்றியமையாது வேண்டப்படும். இதனை ‘ அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே ’
எனவும்
‘ஞானமலது கதிகூடுமோ ’ எனவும் இவ்வாறெல்லாம் எழுந்த ஆன்றோர் திருவாக்குகள் கண்டு தெளிக.
அன்பாலும் அறிவாலும் ஈசனடிக் காட்படுவோரில் அன்பு அறிவினும் மிகுந்து நிற்கப்பெற்றவர் பக்தரெனவும்,
அறிவு அன்பினும் மிகுந்து நிற்கப்பெற்றவர் ஞானிகளெனவும் கூறப்படுவர். இவ்விருதிறத்தாருள்
யான் ஒரு திறத்தாரினும் சேர்ந்தவனல்லேன் என்பார்
‘அடியானுமல்லன் ஞானியல்லன் ’ என்றார். ‘ ஞானியும் ’ எனற்பாலது உம்மை தொக்கு ஞானி என
நின்றது.
(58)
59.
கடவா
ரணத்தின் உரிபோர்வை கொண்ட
கருவேச! ஆதி முதல்வா!
சடவா தனைக்குள்
அவமேகி டந்து
தடுமாறு நெஞ்ச
முடையேன்
அடைவாய் வழுத்தி
வழிபாடு செய்துன்
அடிபேண ஒன்றும்
அறியேன் ;
மடமால் அகற்றி
யிடுமாற ளிக்கும்
வரம்நீ
கொடுக்கும் வரமே.
மதத்தையுடைய யானையின்
தோலைப் போர்வையாகக்கொண்ட கருவை யிலெழுந்தருளிய ஈசனே! ஆதியாகிய முதல்வனே ! சடமாயுள்ள
பொருள்களின் பழக்கத்துள்
|