த
68 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
வீணேகிடந்து தடுமாறா நின்ற
மனத்தையுடையேன், முறையாக உன்னைத் துதிசெய்து தொண்டுபட்டொழுகி, உனது திருவடியை விரும்பச்
சிறிதும் அறியேன்; (ஆதலால்) அறியாமையாகிய ஆணவமலத்தால்வரும் மயக்கத்தை அகற்றும் வண்ணம்
கொடுத்தருளும் வரமே, நீ அடியேனுக்குக் கொடுக்கத்தக்க வரமாம்.
கடம்-மதம். வாரணம்-யானை.
உரி-தோல். சடம்-அறிவற்ற பொருள்கள். வாதனை-வாசனை-பழக்கம். அடைவாய்-முறையாய் ; ‘நூலடைவு’ என வருதல் காண்க. மடம்-அறியாமை. மால்-மயக்கம். அறிவை மறைத்து அறியாமையாகிய
மயக்கத்தைச் செய்வது ஆணவமலமே யாதலின் மடமால் என்றது அறியாமையாகிய ஆணவமலத்தால் வரும்
மயக்கத்தை.
(கொடுக்கும்) வரம்-எழுவாய்; (அளிக்கும்)வரம்-பயனிலை.
60.
வரையா
தியற்றி யிடுபாவ காரி;
மறமன்றி
வேறு புரியேன்;
விரைமா லைசுற்று குழலாரி
டத்து
மிகஆசை வைத்து
மெலிவேன்;
கரையா திருக்கும்
மனநீக ரைத்துன்
அடிபாட வைத்த
கதைநான்
உரையால் நிறைக்க
முடியாது முக்கண்
உடையாய்!
களாவின் ஒளியே!
(நன்று தீது என்பவற்றுள்
தீதினை) நீக்காது, அதனைச் செய்யும் பாவமுடை யேன்; (ஆதலால்) அப் பாவத்தொழிலன்றி வேறு
சிறிதுஞ் செய்யேன்; வாசமிக்க கூந்தலையுடைய பெண்களிடத்து மிகவும் ஆசைகொண்டு மெலியா நின்றேன்; திரிநேத்திரங்களை யுடையவனே! திருக்களாநிழற்கீ ழெழுந்தருளிய ஒளிப் பிழம்பே! உருகாதிருக்கும்
என்மனத்தை நீ உருக்கி, உன் திருவடியைப்
|