த
72 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
முருகக்கடவுளைத் தந்தருளிய இறைவனே! திருக்கருவையி லெழுந்தருளிய தேவனே ! (நான்) என் மனத்தை உனக்குக் கொடுத்தேன்,
(நீ) உனது திருவருளினை எனக்குத் தந்தருளினாய் ; வணக்கத்தை உனக்குத் தந்தேன், தாமரைமலர்போன்ற
திருவடியை எனக்குத் தந்தருளினாய்; பசிய பூங்கொத்தை உனக்குத் தந்தேன், முத்தியை எனக்குத் தந்தருளினாய்.
வந்தனை-வணக்கம்.
பைந்துணர்-பசிய பூங்கொத்து. பரகதி-மேலானகதி-முத்தி.
தெய்வம் ஒன்று
உண்டு என்று உணர்ந்து சிந்திக்குமளவும் திருவருள் வெளிப் பட்டுத் தோன்றாதாகலின், ‘சிந்தனை
உனக்குத் தந்தேன் ; திருவருள் எனக்குத் தந்தாய்’ என்றார். திருவாதவூரடிகள் ‘தெய்வமென்பதோர்
சித்தமுண்டாகி-முனிவிலாததோர் பொருளது கருதலும்-ஆறுகோடி மாயாசத்திகள்-வேறுவேறு தம் மாயைகள்
தொடங்கின’ என்றருளிச் செய்தமை காண்க, அவனை வணங்குதற்கும் அவன் அருளே காரணமாதலினாலும்
அடியார் வணங்குதற்கு உரியது இறைவன் திருவடியே யாதலினாலும் திருவருள்பெற்றமை கூறியபின் ‘வந்தனை
உனக்குத் தந்தேன்; மலரடி எனக்குத் தந்தாய்’ என்றார். ‘ அவனருளாலே அவன்தாள் வணங்கி’, என்ற
திருவாத வூரடிகள் திருவாக்கையும் காண்க. இறைவன் திருவடிக்கு அடியார் செய்யத் தக்கது
அர்ச்சனையே யாதலாலும் அடியார் விழையும் முத்திப்பேறு இறைவன் திருவடியிற் கலத்தலே யாதலாலும்,
திருவடி பெற்றமை கூறியபின் ‘பைந்துணருனக்குத் தந்தேன்; பரகதியெனக்குத்தந்தாய்’ என்றார்.
சிந்தனையாவது தியானம்;
வந்தனையாவது வணக்கம்; அடிக்கு மலரிடுதல் அர்ச்சனை. ஆதலின், தியானத்தால் திருவருளும், வணக்கத்தால்
திருவடிப் பேறும், அர்ச்சனையால் முத்தியும் சித்திக்குமென்றாராம்.
இழிந்தவற்றைக்
கொடுத்து உயர்ந்தவற்றைப் பெற்றதாகக் கூறலின் மாற்று நிலை யணி கொள்ளக் கிடக்கும்.
(63)
|