த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
73 |
64.
தேவனே! நின்னை
யல்லாற்
பிறிதொரு
தேவை எண்ணேன்;
பாவனை நின்னி
னல்லாற்
பிறிதொரு
பற்று மில்லேன்;
யாவையுங் காட்டக்
கண்டேன்;
என்னுளே
நின்னைக் கண்டேன்;
காவலா ! கருவை
யானே !
இனிமற்றோர் காட்சி யுண்டோ ?
(தேவர்களுக்குத்)
தேவனே ! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை ஒரு பொருளாகக் கனவிலுங் கருதேன்; உன்னையல்லாமல்
பிறிதொரு பாவனை பற்றுதலுமில்லேன்; (அதனால்) உனது தன்மை எல்லாவற்றையும் நீயே உணர்த்த
உணர்ந்தேன்; (ஆதலால்) என் இதயத்தே உன்னைத் தரிசித்தேன்; எல்லா உயிர்களையுங்
காத்தலில் வல்லவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! இனி (யான் காண விரும்புவது) இத்
திருக்காட்சியன்றி வேறொரு காட்சியுமுளதோ ? (இல்லை.)
காவலன் -
காத்தலில் வல்லவன் - தலைவன். காட்சி-காணப்படுவது; காண்-பகுதி, சி-தொழிற் பெயர்
விகுதி, ணகரம் டகரமானது சந்தி.
கேள்வியாலும் ஆராய்ச்சியாலும் சிவபெருமான் ஒருவனே தெய்வமென்று உணர்ந்தமையால் ‘ பிறிதொரு தேவை
யெண்ணேன்’ எனவும் ‘பிறிதொரு பற்று மில்லேன்’ எனவும் கூறினார். ‘சிவனென யானும் தேறினன்
காண்க’ எனவும்,
‘புற்றில்வா ளரவு மஞ்சேன்; பொய்யர்தம் மெய்யு மஞ்சேன்;
கற்றைவார் கடையெம்
அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந்
தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக்
கண்டால் அம்மநாம் அஞ்ச மாறே ’
எனவும்
திருவாதவூரடிகள் திருவாய்மலர்ந்தருளியதும் காண்க.
|