த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
87 |
(விஞ்ஞானகலர்
பிரளயாகலர் சகலர் என்னும்) மூவகை யான்மாக்களை, மலபந்தத்தினின்று நீக்கி, குற்றமில்லாத முத்தியாகிய
சோலையில், ஈசனும், மின்னலையொத்த இடையையுடைய உமையம்மைக்கு அன்பனும், தேவர்களுக்குத்
தலைவனும் ஆகிய, குற்றமில்லாத பால்போலும் நிறத்தையுடைய இறைவன், (பேரின்பம் துய்த்து மகிழும்படி)
சேர்ப்பான்.
விஞ்ஞானகலர்-ஆணவமலம்
ஒன்றுமே உடையோர்; பிரள யாகலர்-ஆணவம் கன்மம் என்னும் இருமலம் உடையோர்; சகலர்-ஆணவம்
மாயை கன்மமென்னும் மும்மலங்களும் உடையோர். பாசம்-உயிர்களை அனாதியே பற்றிய மும்மலங்கள்.
பசு-ஆன்மா. முத்தி-வீடுபேறு. வனம்-சோலை. மேய்த்திடும் என்பது ஈண்டு நுகரச்செய்யும் என்னும்
பொருளது. மின்னை நேர் இடைச்சி-மின்னலையொத்த இடையினை யுடையாள் (உமாதேவி); ஆசுஇல்-குற்றம்
இல்லாத. இனி இச் செய்யுளிற் கொள்ளக்கிடக்கும் பிறிதொருபொருள் வருமாறு :
(மாடும் எருமையும் ஆடுமாகிய) மூவகைப் பசுக்களையும் கட்டவிழ்த்துக் கொண்டுபோய்க் குற்றமற்ற மூவகை
யாகாக்கினி (வளர்வதற் கிடமாகிய) காட்டில் (அப்பசுக்களுக்குத்) தலைவனும், மின்னற் கொடியைப்
போன்ற கோகுல மகளுக்குக் காதலனும், குற்றமில்லாத பாலமுதால் பொலிவுவாய்ந்த இடையர்களுக்குத்
தலைவனுமானவன் மேய்த்திடுவான்.
இப்பொருட்கு: பாசம்--கயிறு.
முத்தீ முத்தியெனக் குறுக்கல் விகாரம் பெற்றது. வனம்-காடு. ஈசன்-தலைவன். மின்னல், ஈண்டு
மகளிரின் தோற்றத்துக்கு உவமையாயிற்று; இடைக்கன்று. இடைச்சி-இடைமகள். அண்டர்-இடையர்
; இதனை ‘அண்டரே பகைவர் வானோர் ஆயரென் றாகு முப்பேர்’ என்பதா லறிக. பசுக்கள் மூவகையாதலை
நம்பியகப் பொருளில் முல்லைக்கருப்
|