த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
107 |
பந்த சுவாமிகள் தாம்
திருவாய்மலர்ந்தருளிய தேவாரப் பதிக ஈறுகள் பலவற்றி னும் தம்மைச் சுட்டிக் கூறும்போது ‘
நற்றமிழ் ஞானசம்பந்தன் ’ எனவும், ‘தமிழ் ஞான சம்பந்தன் ’ எனவும், ‘ முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ’ எனவும், ‘ செந்தமிழான் ஞான சம்பந்தன் ’ எனவும் பிறவாறும் தமிழொடு
தம்மைத் தொடர்புபடுத்திப் பேசுதலானும், ஆதி சங்கராசாரியர் இயற்றிய ‘ சௌந்தரியலகரி’
என்னும் வடமொழிநூலில் நம் சம்பந்தப் பெருமானார் ‘ திராவிடசிசு ’ எனச் சுட்டப்படுதலானும் ‘
செந்தமிழ்க் கவுணியன்’ என்றார். இங்ஙனமே இந்நூலாசிரியர் தாம் மொழிபெயர்த்தியற்றிய
காசிகண்டத்துப் பாயிரத்துள்ளும், ‘ஏழ்நில வரைப்பு முய்ய ஈர்ந்தமிழ் மாரி பெய்த-காழிமா
முகிலின் செய்ய மலரடி கருத்துள் வைப் பாம்’ என்றனர். இவ்வாற்றால் ‘ செந்தமிழ்’
என்பதனைக் கழுமலத்துக்கு அடை யாக்குதல் சிறப்பன்மையு முணர்க.
(92)
93.
கடையு கத்தினிற்
பொழில்கள் ஏழையும்
கனல்கொ
ளுத்திய சுடலை யம்பலத்(து)
அடலை பூசிஎன் அம்மை
காணநின்(று)
ஆடும் ஐயனே !
போற்றி, போற்றி.நெஞ்(சு)
இடைவி டாமல்உன் சரண
பங்கயத்(து)
இருக்க நல்கிய
இறைவ ! போற்றி.மால்
விடையின் மேவியே
கருவை மாநகர்
வீதி வாய்வரும்
விமல ! போற்றியே.
யுகங்கள் முடியும்
(பிரளய) காலத்தில் ஏழுலகங்களையும் நெருப்பாய்நின்று எரித்தருளியதால் உண்டாகிய சுடுகாடாகிய
பொது இடத்தின்கண் சாம்பலைப் பூசிக்கொண்டு என் அன்னை(யான உமாதேவி) காணும்படி நின்று
திருக் கூத்தாடியருளும் ஐயனே ! வணக்கம், வணக்கம். (எனது) உள்ளம் உனது திருவடித் தாமரையின்கண்
இடையறாது பதிந்திருக்க அருள்செய்த தலைவனே ! வணக்கம். பெரிய
|