பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

111

னாய் ; பந்தமும் வீடுமாயதன்றி அவற்றிற்கு மேற்பட்டோனுமாயினாய் ’ எனப் பொருள் தருதலின் உம்மைகள் இரண்டும் இறந்தது தழீஇய எச்சவும்மை.  சிவபெருமான் பந்தம் வீடு என்ணும் இரண்டிற்கும் மேலானவன் என்பது ‘ பந்தமும் வீடும் ஆயபத பதார்த்தங்கள் அல்லான் ’ என்னும் சிவஞானசித்தித் திருவாக்கினும் பெறப்படுதல் காண்க.  தமிழ்மொழிக்கு ஆதியிலக்கணம் செய்தவராதலால் அகத்தியர் தமிழ்முனி எனப்பட்டரர். ‘ அழகு போற்றி ’ என்பதில் போற்றி என்பதை வியங்கோளாகக் கொண்டு பொருள் கூறுக ; ஈண்டுப் போற்றுதல் புகழ்தல். ‘அழக போற்றி’ எனவும் பாடம் கொள்வர்.

(95)

96. ஆதி நின்திருத் தொண்டு காதலித்(து)
        அறிவு சென்றமட் டாக நின்புகழ்
    ஓது செய்யுளிற் குறையு ரைத்ததிங்(கு)
        ஒன்றும் நின்செவிக்(கு) உற்ற தில்லையோ ?
    காதல் நண்புடைக் கவிஞன் ஏவலும்
        கங்கு லிற்கழற் கால்சி வப்புறத்
    தூது சென்றவா ! போற்றி. நாடொறும்
        தொழும வர்க்கருள் கருவை ஐயனே !

    நாள்தோறும் (உன்னை) வணங்குகிறவர்களுக்குத் திருவருள் செய்யும் திருக்கருவைக் கடவுளே !  ஆசைத் தோழமை பாராட்டிய (சுந்தரமூர்த்தி என்னும்) பாவலர் ஏவியவுடனே, வீரக்கண்டை அணிந்த நின் திருவடிகள் சிவக்க இராப்போதில் தூது சென்றவனே !  வணக்கம்.  உன் திருவடித் தொண்டை விரும்பி, (அவ்விருப்பம் எழுந்த நாள்) முதலாக (இன்று வரையும்) என்னுடைய (அற்ப) அறிவு சென்ற அளவாக உன்னுடைய புகழை(ப் பாடுதல் காரணமாக யான்) பாடிய பாக்களில் (என்னுடைய) குறைகளையும் (பலமுறை உரைத்தேன். அங்