த
38 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
29.
பெருமை
சான்றநின் திருவெழுத் தைந்துமே
பெரும்புணை எனப்பற்றி
அருமை சான்றஇப்
பவக்கடல் கடக்குமா(று)
ஆசையில்
துணிகின்றேன்
இருமை இன்பமும்
அடியவர்க்(கு) ஊட்டிடும்
இறைவனே !
எம்மானே !
தரும மூர்த்தியே !
ஒப்பனை வனமுலை
தழுவுதிண்
புயத்தானே !
இம்மை இன்பத்தையும்
மறுமை இன்பத்தையும், தன்னையடைந்த, அடியார்க்கு ஊட்டும் இறைவனே! எமது பெருமானே ! தருமத்தையே
திருவடிவமாகக் கொண்டவனே ! ஒப்பனை யென்னுந் திருநாமம் வாய்ந்த உமையம்மையினது சந்தனக்கோலம் அமைந்த தனத்தைத் தழுவிய வலிய புயத்தை யுடையவனே ! பெருமை நிறைந்த உனது
பஞ்சாக்கர மந்திரத்தையே பெரிய தெப்பமெனப் பற்றி அருமை பொருந்திய இப் பிறவிக் கடலைக்
கடக்கவேண்டுமென்று ஆவலோடு துணிகின்றேன். (என்னைக் கரைசேர்ப்பது உனது கடன்.)
சான்ற-நிறைந்த,
பொருந்திய. பவக்கடல்-பிறவிக்கடல்.
இருமை-இம்மை மறுமை. வனம்-அழகு. திண்புயம்-வலிய புயம். ஆசையில்-ஆசையோடு ; உருபு மயக்கம்.
பிறவி
வாயிலாகவே முத்திப்பேறு பெறவேண்டியிருத்தலின் ‘அருமைசான்ற இப்பவக்கடல்’ என்றார்.
‘அரிதரிது மானிடராய்ப் பிறத்த லரிது’ என்றதுங் காண்க.
(29)
|