பக்கம் எண் :

26அழகர் கிள்ளைவிடு தூது


"உண்ணின் றுருக்கும் .......
அத்துவிதா னந்தமென்ற களி யானையினான்"

(112 - 116)

"தானந் தவர்க்கத் துடனெழுந்து......வேதப்புரவியான்"
 

(116 - 119)

எனவும் அத்துவிதானந்தத்தை யானையாகவும், வேதத்தைப் புரவியாகவும் உருவகஞ் செய்திருப்பது காண்க.
"வன்போரில்,
மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகி
கூவும் பெரிய குயில்கருகிப் - பாவம்போல்
நின்று மறுப்படுநாள் நீதா னடுப்படையிற்
சென்று மறுப்படா தேவந்தாய்"

(39 - 41)

எனவும்,
"பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்"

(3)

"கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்" ;

(49)

எனவும் கற்பனை வந்துள்ள இடங்கள் காண்க. இன்னும் பல இடங்களில் இவ்வணிகள் வந்துள்ள பகுதிகளும் பிற வணிகள் வந்துள்ள பகுதிகளும் ஆய்ந்து காண்க.

சொல்லணி

"குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்" (காப்பு)
"பாத கமலம் பரவுமலை யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்"

(141)


"திருப்பாது கைக்கும் செழுங்கருடனுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன்....."

(137)

எனவும்,