பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

19

வட

        வட்டமதிச் சித்ர முகத்
            துக்குஅயல்மைக் கண், குருதிப்
        பொட்டுநுதல், சற்ப ணிலப்
            பொற்குழைவர்க் கத்தினளே.                 

(111)

    ‘அயல் மைக்கண்’: அருகில் உள்ள மையுண்ட கண்.

        கொக்கிறகு, ஒற் றைப்பிறை, அப்
            புற்றரவக் கொத்தடையப்
        புக்குறைசெக் கர்க்குடிலப்
            பொற்சடிலக் கற்றையளே.                     

(112)

    ‘செக்கர் குடில பொற் சடிலக் கற்றை’:  செவந்த,  சுருண்ட,  அழகிய சடைக்கட்டு

        ஆகாசம் திருமருங்குல்,
            அதிபார வனமுலைமேல்
        ஏகாசம் தலைமாலை,
            இனி வேறுஎன் இயம்புவதே!                 

(113)

    ஆகாசம் திருமருங்குல்’: வெளி உடைய இடை.

        அருளேதன் திருமேனி
           ஆரணங்கள் ஒருநான்கின்
        பொருளே தன் திருத்தொழில்கள்,

           புகழ்என் என்று இயம்புவதே!                                                        

(114)