வலம
வலம்புரிப்படை
நல்லசுரர் குலமுழுதும் தொழுது
வாழ்த்த,
நனிஅசனிக் குரல்கேட்ட
நாகம் போல
வல்அசுரர் குடர்குழம்ப, முழங்கும்
வெல்போர்
வலம்புரியை நலம்புரிந்து
வணக்கம் செய்வாம்:
(3)
“மலர்க்கற்றை நறுங்குஞ்சி
முடியா முன்னே,
மறைநான்கின் பொருள்முடித்து
வடித்து வார்த்தை
சலக்குஅற்று நின்றநிலை சலியா
மைந்தன்
தான்கற்ற எட்டெழுத்தும்
தழைக்க!” என்றே.
(4)
‘குஞ்சி முடியா முன்னே’: மயிர்முடி கூடாத குழந்தைப்
பருவத்தே.
விற்படை
மைவளையும் கருங்கடல்போல் முழங்கி
ஆர்த்து
வாள்அவுணர் பொர,
ஒருநாள் வானோர் சேனை
கைவளையும் படிவளையும் கொடிய
போரில்
கால்வளையும் தடஞ்சிலையைக் கருத்துள் வைப்பாம்:
(5)
‘கைவளை கால்வளை’: வில்லை இழுக்கும்போது, ஒருகை நீட்டி
ஒருகை முடக்கி, ஒரு கால் ஊன்றி ஒரு கால் வளைத்து நிற்கும் நிலை. ‘கால்’: வில் நுனி எனவும்
ஆம். ‘வளையும் போர்’: சூழும் போர்.
“கயல்வளைய விளையாடும் கலங்கல் நல்நீர்க்
காவிரியில் கண்துயிலும்
பெருமாள் காக்கும்
செயல்வளையாது, அறம்வளர்க்கும்
செங்கோல் செல்லத்
திருஆணை உலகேழும் சிறக்க!”
என்றே.
(6)
‘கலங்கல் நன்னீர்’ ‘தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
திருவரங்கம்’ (திருமாலை). ‘காக்கும் செயல் வளையாது’: திருமால் காத்தற் கடவுள் ஆதலின், அவன்
காத்தல் செயல் கோடாமல். ‘திரு ஆணை’: திருமகளுடைய கருணையே திருமாலுடைய ஆணை, ‘திரு ஆணை நின்
ஆணை’ ( திருவாய்மொழி ).
வாட்படை
வெம்பகைஞர் உடல்உகுசெம்
புனலூடு ஆடி
வெள்நிணமும் பசுந்துளவும்
விரவி நாறச்
செம்பருந்து விருந்தாரச் சிறைவண்டு
ஆர்க்கும்
தெய்வநெடுஞ் சுடர்வடிவாள்
சிந்தை செய்வாம்:
(7)
செம்மை, வெண்மை, பசுமை விரவி இருக்கும் அணி காண்க.
பருந்துக்கு விருந்து செய்ய வண்டு பாடும்.
|