ம
மீள அணங்கை வணங்கி எழுந்து,
விளம்பலுறா
வெருவா,
“வாள்அவு ணன்தனை யேஅரு காக
அழைத்துஇது கேள்” எனவே,
(169)
திரு நகை வந்தது; நயன நெடுங்கனல்
சிந்த நிவந்தது அவள்
அருகுற நின்றுஅனை அடியில் விழுந்தது,
அயல்என்
விளம்புவதே?
(170)
“அரணிய நெஞ்சினன்; அழல்புரை
வெஞ்சினன்;
அசுரன்; அவன் பெயர் தான்
இரணியன் என்பது; இவ் எழுபுவ
னங்களும்
இடருற வந்தவனே.
(171)
“பதியொரு வன்புணர் பருவ மடந்தையர்
இருவர் பயந்தவரில்,
திதியென நின்றவள்; அசுரர்
குலம்தொழு
தெரிவை பயந்தவளே.
(172)
‘பதி’: குலபதி கச்யபன், அவன் மனைவியர் திதியும் அதிதியும்.
“அவன்வர மும்பெரு வலியும் வரம்பில
அளவில் அறிந்தன கேள்!
சிவன் அவன் நெஞ்சினும் நியதம்
அவன்பெயர்
செப்பும்; இனிச் செயலே!
(173)
“தரணியின் மேல்உயி ருடைய
சராசர
சகல சமூகமுமே,
“இரணிய னேநம! இரணிய னேநம!”
என்றுஇது
பேசுவதே!
(174)
“காலைப டான், இருள் மாலைப
டான்; வரு
காலன்வி டாதுஉயிர் சூழ்
வேலைபடான்; எனை ஆயுதம் மேவினும்
மேனி படான் அவனே.
(175)
‘வேலை
படான்’: இயமனுடைய வேலினால் அழியான், ‘ஐ’ உருபு மயக்கம். மேனி படான்’ உடலில் படாது; ஏழாம்
வேற்றுமைத் தொகை. இரணியன் வதைப் படலம் 17.
|