பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

61

New Page 1

        வேலையில் விழுந்த குன்றம்
            எழுந்துமேல் மிதந்த போது,
        காலையில் இரவி அன்னான்
            காட்சியை விளம்பல் ஆமோ.      
           

        (395)

        அரவினால் மலையோடு ஆர்த்த
            அசுரரும் சுரரும் கேட்பப்,
        பரவினான் முதல்வன் நாமம்
            பாலகன், சால நொந்தே;                
    

(396)

        “சோதியே! நீதியோர்
            தொழு பெருங் கடவுளே
        துறவனே! அறவனே!
            துணைவனே சுருதிநூல்
        ஆதியே! உருவமே!
            அருவமே! அமலனே!
        அடியனேன் அபயம்;நான்
            அபயம்;நான் அபயமே.                 
   

(397)

        “மாகமே! அனி லமே!
            அனலமே! சலிலமே!
        வையமே! உருவமே!
            யோகமே தருவதோர்
        ஆகமே! மோகமே!
            அறவனே! அமலனே!
        அடியனேன் அபயம்;நான்
            அபயம்;நான் அபயமே.                    

(398)

    இறைவன் விண், கால், தீ, நீர்; மண் என்ற ஐம்பூதங்களும் ஆவான்; ‘யோகமே’ ( முயற்சி ) தரும் ஆகம்’ ( உடல் ) ஆவான்; மோகத்தையம் அதை நீக்க அறத்தையும் அவனே தருவான்; அவன் அழுக்கு அற்றவன்.

        “வையம்ஏழ் உண்டவாய்
            வள்ளலே! வெள்ளநீர்!
        வண்ணனே! முளரியங்
            கண்ணனே! வானுளோர்
        அய்யனே! மெய்யனே
            ஆழியங் கையனே!
        அமலனே அடியனேன்

            அபயம்; நான் அபயமே.” 

                                                           (399)