பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

74

        பருதியின் உருகெழு கிரணம் ஒப்பன;
            பலகவடு ஒருகிரி விடுவது ஒப்பன;
        சுருதியின் முதல்விளை கிளைகள் ஒப்பன;
            சுடருற நிமிர்வன படதடக்கையே.   
               

(486)

    ‘கிளை’: வேதங்களின் சாகைகள்

        தரைபொரும் எழுகுல வரையி டத்தன;
            தமனிய மலைபொரு பெரு லவத்தன;
        திரைபொரு கனைகட லிடைதிளைப்பன-
            திசைபெற விடுவன சிலதடக்கையே. 
           

(487)

        நிலமகள் திருநுதல் வியர் புலர்த்திய
            நிறமெழு கிரியன சில திருக்கரம்
        மலர்மகள் நகில்புனை குழம்பினால்
            வடிவழ குடையன சிலமலர்க் கையே 
            

(488)

        மிடல்கெழு பரசுவும் உழுகலப்பையும்
            வியன்மிகு குலிசமும் விசிறு பட்டமும்
        உடல்வகிர் இடுவன; திகிரி வச்சிரம்
            உடையன; இடையன,சிலஉரக்கையே.
             

(489)

    ‘உரக்கை’: வலியகை

        பரிகமொ டெழுவன; பலகை பற்றின;
            பலகொலை அறிவன; படஅடிப்பன;
        தெரிகணை தெரிவன; சில வளைப்பன;
            செருமுனை புகுவன-சிலதிருக்கையே.             

(490)

        துளவணி தொடையன; தொடி செறிப்பன;
            தொடுகழல் புனைவன; தொழில்புரப்பன;
        இளஅணி அடுவன; இகலின் முற்பட
            எறிபடை எறிவன-சில திருக்கையே.            

(491)

        ஒளிநில வுறுவன; உயிர் குடிப்பன;
            உயிர்பெரு வரையோடு மயிர்பிளப்பன;
        தெளிவினம் அரிஉகிர் வடிவம்ஒப்பன;
            திருமனம் உடையன-சில திருக்கையே.      
     

(492)

    ‘திருமனம்’: கைக்குத் தானே இயங்கும் மனம் உண்டு.

        *வெருவரு விழியன; விளி புறப்பட
            வெடிபடு நகையொடு வெயில்விழித்தெதிர்
        ஒருவன்முன் ஒருதிரு முகம் வெளிப்பட,
            உரமுடை அவுணரை உறநெருங்கியே,
              

(493)

    *திருக் கரங்களைப் பேசுமிடத்து முறைபிறழ வந்ததது.