பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

76

உடல

        உடல்வரக்கடை விழிகொதித்தெழ,
            உறு கறிற்றணியைப்
        படஅடித்து,எதிர் பரிபிளப்பன-
            பல திருக்கரமே.    
                    

(502)

        முழுவலிப்பொடு முரண்உடல்பொறை
            முறியஎற்றி எறீஇப்
        பழுஎலுப்புஅலகு இடைபறிப்பன-
            பல திருக்கரமே.           
             

(503)

        அடுகளத்திடை அமர்இடற்குஉயர்
            அடைவு கெட்டவரைப்,
        படுகொலைச்சரம் முடுகிநிற்பன-
            பலதி ருக்கரமே.   
                       

(504)

        சிலவரைக்குடல் உருவிவிட்டு,உடல்
            சிலவரைச் சிதறிப்,
        பலவிதத்துஅடு கொலைபடுப்பன-
            பலதிருக்கரமே.  
                        

(505)

        எயிற்றிடைப் பலர் அகப்படச் சிலர்
            புற ப்படக் கதுவியே,
        வயிற்றிடைக் கனல் மடுத்தெரிப்பன-
            வலத்திருக்கை பலவே.                     

(506)

        அலத்தகக்கம லத்தையொப்பினும்,
            அமர்க்களத்து அவுணர்
        மலைத்து அடர்த்துவர் வரப் புடைப்பன-       
            வலத்திருக்கைபல வே.
                    

(507)

        இளைத்து உளைத்தவர் படப் படச் சில
            இடத் திருக்கை புடை போய்
        வளைத்து வைத்துஅவர் தமைப் புடைப்பன-
            வலத்திருக்கை பலவே.     
               

(508)

        சிரித் தெரித்துஎழு சினக் கனல் படர்
            செருக் களத்தில் ஒரு பால்,
        வரித்த கொற்றவை மலர்க்கை பற்றின-
            வலத்திருக்கை பலவே.  
                  

(509)