விழி இயல்பு கூறி விளித்தது | 48. | கடலில் விடமென அமுதென மதனவேள் | | | கருதி வழிபடு படையொடு கருதுவார் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ. | (பொ-நி.) விடமென, அமுதென, மதனவேள் படையொடு, உயிரையும் உணர்வையும் உருவும் மதர் விழி உடையவர் திறமின்; (எ-று.) (வி-ம்.)கடல்-பாற்கடல். விடம்-நஞ்சு; மதனவேள்-மன்மதன். வழிபடு மதனவேள் என இயைக்க. படை - மலர்க் கணை. உருவும்- ஊடுருவிச்செல்லும். மதர் - செருக்கு. கண்ணே மன்மதன் படைகளைக் கொண்டிருத்தல் கூறப்பட்டது - மாதர்கண்கள் ஆடவர்கள் பிரியுங்கால் துன்பத்தையும் புணருங்கால் இன்பத்தையுஞ் செய்வனவாம். "நீங்கிற்றெறூஉம் குறுகுங்கால் தண்ணென்ணும்" என்னுங் குறளும் ஈண்டு எண்ணற் பாலதாம். (28)தோற்ற இயல்பு கூறி விளித்தது | 49. | முறுவல் மாலையொடு தரள மாலைமுக | | | மலரின் மீதும்முலை முகிழினும் சிறுநி லாவும்அதின் மிகுதி லாவும்என வருந லீர்கடைகள் திறமினோ. | (பொ-நி)முறுவல்மாலையொடு தரளமாலை, சிறுநிலாவும் மிகு நிலாவுமென வருநலீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) முறுவல் மாலை-பல் வரிசை. தரளம்-முத்து. முகிழ்-மொட்டு. சிறுநிலா- மூன்றாம் பிறை. மிகுநிலா-நிறை நிலா. என-என்று தோன்றுமாறு. வரும் - நடந்து வரும். நலீர் - நல்லீர்; பெண்களே. பல்வரிசையும், முத்துமாலையும், பிறைநிலாவும் நிறைநிலாவும் போன்றன. பல்வரிசை சிற்றளவினவாகலான் அது, இளம்பிறையின் ஒளிக்கும், முத்துமாலை வட்டவடிவமாகப் பெரிதாக இருத்தலின், நிறைநிலாவின் ஒளிக்கும் உவமையாக்கி உரைத்தார். (29) மனங்கவரும் இயல்பு கூறி விளித்தது | 50. | முருகிற் சிவந்த கழுநீரும் | | | முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர் செம்பொற் கபாடம் திறமினோ. | |