உ
நளவெண்பா
மூலமும் உரையும்
பாயிரம்
கடவுள் வாழ்த்து
பிள்ளையார்
நேரிசை வெண்பா
1. நேசரிதங் கூர நிலவலயம் தாங்குநளன்
மாசரிதங் கூற வருந்துணையா - ஈசன்
கரியா னைத்தான் கருதுபுகழ் பூண்ட
கரியா னனத்தான் கழல்.
(இதன் பொருள்) ஈசன் - சிவபெருமானும்,
கரியான் - திருமாலும், அ(ன்)னத்தான் - நான்முகனும்,
கருது - எண்ணி வணங்குகின்ற, புகழ்பூண்ட - புகழினை ஏற்ற,
கரி ஆனனத்தான் - யானைமுகக் கடவுளின், கழல் - திருவடிகளானவை,
நேசர் - தன்பால் அன்புடையார், இதம்கூர - நன்மை
மிகுதிப்பட, நிலைவலயம் - இம் மண்ணுலகத்தை, தாங்கும்
நளன் - பாதுகாக்கின்ற நளவேந்தனது, மாசரிதம் -
பெருமைமிக்க வரலாற்றினை, கூற - பாடுதற்கு (சொல்வதற்கு),
அரும்துணைஆம் - சிறந்த துணையாக முன்னின்றருள்
புரியும். (ஆதலால் அவைகளை வணங்குவாம்)
(கருத்து) நளன் சரிதம்கூறப்
பிள்ளையார் வடிகள் துணையாகும்.
|