7
7. சில நயங்கள்
இப் பரணி ஆசிரியருடைய கவிதைத் திறன் பல இடங்களில்
விளங்கும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்:-
தாழிசை 77. பிரமன் ஆகாயத்தில் கங்கையாற்றைப்
படைத்தது இப்பாலை
நிலத்தின் வெம்மையை அஞ்சியே.
“ 78. உலகில் ஆறுகள் ஏன் ஓடுகின்றன? கடல்
ஏன் குழியில்
விழுந்தது? இப்பாலை நிலத்தின் வெம்மையை ஆற்றாமல்.
“ 79. உலகத்தை எல்லாம் உண்ட திருமால் ஏன்
அதை மீள
உமிழ்ந்தான்? இப்பாலைவனத்தின் வெம்மை
பொறாமல்.
“ 80. சிவபெருமானுடைய பாதங்கள் சிவந்தது
ஆடியதால் அன்று;
இந்தப் பாலைவனத்திலுள்ள துர்க்கையைத் தேடி
நடந்து
சென்றதால்.
“ 123. பிள்ளை பசியால் வற்றிய முலையைப்
பிடித்திருக்கத்
தாய்ப்பேய் தன்னையும் பிள்ளையையும் காக்க முடியாமல்
சூல்
செய்த தன் கண்வன் பேயை முறைத்துப் பார்த்துத்
தன் நாக்கைக்
கடிக்கும்.
“ 352-4. பிரகலாதனை இரணியன் கொடுமைப் படுத்த,
அதைப்
பொறாது ஆகாயம் அழுதது. அவ் அழுகையே இன்றளவும்
ஆறாக ஓடுகிறது. குன்று அழுதது; அவ்வழுகையே இன்றளவும்
அருவியாக வீழ்கிறது.
“ 565. நரசிங்கம் இரணியனுடைய தாள் இரண்டையும்
பிடித்துச்
சுழற்றியது. அந்தச் சுழல் விசையால் இன்று வரை சூரியனும்
சந்திரனும் உலகத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
“ 566. இரணியன் அன்று கக்கிய இரத்தமே அண்ட
கோளத்துக்கு
அப்பால் உள்ள மலையில் தோய்ந்து இன்று
நமக்குக் காலையிலும்
மாலையிலும் செந்நிறமாகத் தெரிகிறது.
“ 620. கலிங்கத்துப்பரணியில் பிரிந்த
தலைவி கொழுநன் தன் முலை
மீது வைத்த நகக்குறியை யாரும் இல்லாத இடத்தில்
ஆடையை
நீக்கி கண்ணுற்று மனம்
|