பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்163

முலையே யணிந்தமுகிழ் நகைநீ ரொர்பெண்கொடியின்
   முலையோ டுமுன்கை வளையால்
மலையே குழைந்திடுத மிருதோள் குழைந்துரைநம்
   மதுரே சர்தந்த வரமே.    
(84)


கட்டளைக் கலித்துறை
188.
வரும்புண்ட ரீக மிரண்டாலொர் கல்லுமென் வன்னெஞ்சமாம் 
இரும்புங் குழைத்த மதுரைப் பிரான்வெற்பி லேழ்பரியோன் 
விரும்புந் தடமணித் தேர்வல வாவெஞ் சுரமிதன்றே 
கரும்புங் கனியு மிளநீரும் பாரெங்குங் கண்களினே.     
(85)

        அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
189.
கருவிட்ட காடெறிந்து கடம்பவனத் திருப்பீர்நும்    
   கடுக்கைக் காட்டின்    
மருவித்த கொள்ளைவெள்ள மடுப்படிந்து மூண்டெழுமால்    
   மதித்தீக் கெட்டேன்    

விசேட அணி. பிறிது என் ஆம் - வேறுதவம் என்ன பயனுடையதாகும்? முலை - முல்லை. “முலையணிந்த முறுவலாள்” (கலி. 1.) முகிழ்நகை - தோற்றிய சிரிப்பு. ஓர் பெண் கொடி - உமாதேவியார். குழைந்திடும்- உமாதேவியார். குழைந்திடும் - குழைவதற்குக் காரணமாகிய. (பி-ம்.) ‘குழைந்தது நம்’. மதனனது ஆண்மை மதுரேசர் தந்த வரத்தால் வந்ததென்பது கருத்து. (554.)

    188. வினைமுற்றி மீளும் தலைவன் இடைவழியில் தலைவியின் உருவெளித் தோற்றத்தைக் கண்டு தேர்ப்பாகனோடு கூறியது.

    புண்டரீகம் இரண்டாலென்பதைக் கல்லுக்கும் இரும்புக்கும் தனித்தனியே கூட்டுக. கல் - மேருமலை; அதனைக்குழைத்த புண்டரீகமிரண்டென்றது திருக்கரங்களை. நெஞ்சமாகிய இரும்பைக் குழைத்த புண்டரீகம் இரண்டு; திருவடிகள். ஏழ்பரியோன் - சூரியன். அவன் விரும்புதலாவது தன் தேரை ஓட்டுதற்கு இவன் தக்கவனென்று விரும்புதல். வலவா - பாகனே. சுரம் - பாலைநிலம். கரும்பென்றது புருவங்களை. பனி; இதழ் - இரநீர்: நகில். கண்களின் - கண்களால். (பி-ம்.) ‘பாகுங் க்கனமுமே’ - மருதநிலத்தில் தோன்றுதற்கு உரிய கரும்பு முதலியன பாலைநிலத்தில் தோற்றியது என்ன வியப்பென்றான்.

    189. தலைவி கூற்று; சந்திரோபாலம்பனம்.