உணர
|
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
29 |
உணர்ந்துகொள்க. இதற்கு
இலக்கணமும் துணைபுரிகிறது. “செப்பரிய காப்புத்தால் செங்கீரை “ என்னும் வெண்பாப் பாட்டியலைக்
காண்க.
சப்பாணிப்பருவம் :
இது குழந்தையை இருகைகளையும் சேர்த்துத் தட்டி ஓசை எழுப்புமாறு வேண்டுதல் ஆகும். இஃது ஒன்பதாம்
மாத நிகழ்ச்சி. “ ஒன்பதாம் திங்களில் உயர் சப்பாணியும் “ என்பது பிங்கலந்தை.
“குலைகெழு தடநிறை
கலைசை நகர்க்கிறை
கொட்டுக சப்பாணி “
- செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
முத்தப்
பருவம் :
இது குழந்தையை முத்தம் தருமாறு வேண்டும் பருவமாகும். இது பதினோராவது மாத நிகழ்ச்சி, “ பத்தினோடு
ஒன்றில் முத்தம் கூறலும்“ என்பது பிங்கலந்தை. இந்தப் பருவத்தைப்பாடுவதில் புலவர்கட்குப்
பெருவிருப்பம் ஏற்படும். முத்தம் என்னும் சொல், முத்துக்களையும் வாய் முத்தத்தையும்
குறிக்கும். ஆகவே, குழந்தையை முத்தம் கேட்கும்போது, “பல்வேறு இடங்களில் தோன்றும் முத்தம்,
வேண்டா. உன்முத்தமே வேண்டும் “ என்று கூறும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பதை அப்பாட்டைப்
படிக்கும்போதுதான் தெரியவரும்.
முத்தம்தனக்கு விலைஇல்லை
முருகா முத்தம் தருகவே
முத்தம் சொரியும் கடல்அலைவாய்
முருகா முத்தம் தருகவே
- திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
வாரானைப்
பருவம் : இது குழந்தையை வருக வருக என அழைக்கும் பருவம் ஆகும். இது பன்னிரண்டாம் மாத நிகழ்ச்சி.
அதாவது ஓராம் ஆண்டு நிகழ்ச்சி. இதனைப் பிங்கலத்தை நிகண்டு “ஆண்டுவரையின் ஈண்டு வருக என்றலும் “
என்று கூறுகிறது. வா+ரு+ஆனை என்று இச்சொல் பிரியும். ஆனை தொழிற் பெயர் விகுதி. இது
வருகைப் பருவம் என்றும் கூறப்பெறும். அதுபோது,
|