New Page 1

38

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்ப் பாடல்

களில் அமைந்த கருத்துச் சுருக்கம 

பாயிரம 

     விநாயகக் கடவுள் வணக்கம் :  விநாயகர் விசுவரூபம் எடுத்தது ;  அதுபோது சந்திரன் விளங்கிய நிலை ;   நடராசப்பெருமான் உலகெலாம் என்னும் தொடரைச் சேக்கிழார்க்கு உணர்த்தியது.  “மலர் சிலம்படி“ என்னும் தொடரின் உண்மைப் பொருள் ;  நால்நெறி (சரியை கிரியை, யோகம், ஞானம், சத்புத்திர தாச சக ஞான மார்க்கங்கள்.)

பக்கம் 1-9 

     குருவணக்கமும் அவை அடக்கமும் :   திருக்கயிலாய பரம்பரைக் குறிப்பு.  சேக்கிழார், உமாபதி சிவம், சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவபெருமான், கணபதி, முருகன் இவர்கட்கு ஒப்பாதல், குருவின் பாண்பு ; அவையடக்க விளக்கம்.  பக்கம் 10-22

 1. காப்புப் பருவம்

    செய்யுள் 1. திருவாரூர்த்தியாகர் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுத்தல் ;  தில்லைவாழ் அந்தணர் முதல் ஏழு அடியார்களின் வாழ்க்கைச் சுருக்கம்.  உலகெலாம் எனும் தொடரை முதல் இடை, கடையில் அமைத்திருத்தல்.  சைவ பரிபாஷை, சம்பிரதாயம், காப்புப்பருவ விளக்கம்.பக்கம் 23-35

    செ. 2..  ஏழு முனிவர், ஏழு குதிரை, எறிபத்தர் முதலான எழுவர் வரலாற்றுச் சுருக்கம், சேக்கிழாரின்