கள

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

49

களின் வியப்பு, தொண்டை நாட்டின் பொழில்வளம், சிற்றில் பருவ விளக்கம்.  பக்கம் 605-609 

   செ. 2. சிறுமியர் தாம் கட்டிய சிறு வீடுகள் பிற மதத்தர் கட்டிய இடங்கள் அல்ல எனல்.  பாலாற்று வளன், நெல் வளர்ச்சி, தொண்டை நாட்டு வயல்வளன், குன்றத்தூர் செல்வச் சிறப்பு.  பக்கம் 610-612

    செ. 3. சிறுமியர் தம் வீட்டைச் சிதைக்காமல், பிற சமயத்தவரைச் சிதைக்க வேண்டல், அதனால் புகழ் புண்ணியம் உண்டு எனல்.  தொண்டை நாட்டின் மரங்களின் சிறப்பு.  பக்கம் 612-614

     செ. 4. சிறுமியர் சேக்கிழாராம் குழந்தையை ஏரால் உழுமாறு வேண்டல் ;  காலால் உழவேண்டா எனல், இவ்வாறு செய்தற்குரிய காரணங்களையும் அறிவித்தல், தொண்டை நாட்டின் இயற்கைக் காட்சி.  பக்கம் 615-618

    செ. 5. சிற்றிலைச் சிதைத்தால் அன்புடைய பலர்க்கும் துன்பம் தரும் எனல், தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்பதற்கு ஏற்ற காரணங்கள்.  பக்கம் 619-621

    செ. 6. சேக்கிழார்க்குரிய பட்டமும் பெருமையும் ;  தொண்டை நாட்டின் வாழைமரச் சிறப்பு.  பக்கம் 622-634

      செ. 7. தொண்டை நாட்டில் கரிகால் சோழன் எண்ணாயிரக் குடிகளை அமைத்தல் ;  சேக்கிழார் எல்லாரினும் மேம்பட்டவர் எனல் ;  சிவபெருமானை மும்மூர்த்திகளில் ஒருவர் என்பார் நரகம் அடைவர்.  பக்கம் 634-643

    செ. 8. உப நிடதங்கள் பல.  திருமண் இட்டவர் மோகம் ஒழிய வழி ;  வரால் மீன்களின் அட்டகாசம்.  பக்கம் 643-648

    செ. 9. சேக்கிழார் சோழனைப் பணியும் பகைவர்க்கு வீடு கட்டித்தரல் ;  பிராம்மணர்கட்கு வீடு கட்டித்தரல் ;  குடி