சலமும் சீயும் சரியும் ஒருவழி; உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து, கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை. | 35 |
| | |
ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை, நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி எனதற நினைவற இருவினை மலமற வரவொடு செலவற மருளற இருளற இரவொடு பகலற இகபரம் அற ஒரு | 40 |
| | |
முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித் திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை, நினைமின் மனனே ! நினைமின் மனனே ! | 45 |
| | |
சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை நினைமின் மனனே ! நினைமின் மனனே ! | |
| | |
திருச்சிற்றம்பலம் கோயில் திரு அகவல் - 2 காதள வோடிய கலகப் பாதகக் கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும் காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள் பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச் சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து | 5 |
| | |
அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர் ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம் சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்; வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்; ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை; | 10 |