நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம் அடலைப் பெரிய சுடலைத் திடருள்; ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்; ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்; | 15 |
| | |
மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்; சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்; காற்றில் பறக்கும் கானப் பட்டம்; விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை; சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை; | 20 |
| | |
ஈமக் கனலில் இடுசில விருந்து; காமக் கனலில் கருகும் சருகு; கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி, பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு; மணமாய் நடக்கும் வடிவின் முடிவில் | 25 |
| | |
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல் ஊரில் கிடக்க வொட்டா உபாதி; கால் எதிர் குவித்தபூளை; காலைக் கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்; அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்; | 30 |
| | |
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்; நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து; கண்துயில் கனவில் கண்ட காட்சி; அதனினும் அமையும் பிரானே! அமையும்; இமைய வல்லி வாழிஎன் றேத்த | 35 |
| | |
ஆனந்தத் தாண்டவம் காட்டி ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே! | |
| | |
கோயில் திரு அகவல் - 3 பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்! | |