சுட்டிக்காட்டி ஒண்ணாதபாழ் சூனி யந்தன்னைச் சூட்சமதி யாலறிந்து தோஷ மறவே எட்டிபிடித் தோமென் றானந்த மாகப்பை எடுத்து விரித்துநின் றாடு பாம்பே. | 8 |
| | |
எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய் இருந்து திருவிளையாட் டெய்தியும் பின்னர் அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே. | 9 |
| | |
குரு வணக்கம் சாற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே தானம் வாங்கி நின்ற வெங்கள் சற்கு ருவினைப் போற்றி மனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப் புகர்ந்து புகழ்ந்துநின் றாடாய் பாம்பே. | 10 |
| | |
பொய்ம்மதங்கள் போதனைசெய் பொய்க்கு ருக்களைப் புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும் மெய்ம்மதந்தான் இன்ன தென்றும் மேவ விளம்பும் மெய்க்குருவின் பதம் போற்றி ஆடாய்பாம்பே. | 11 |
| | |
வேதப்பொருளின்ன தென்று வேதங் கடந்த மெய்ப்பொருளைக்கண்டுமனம் மேவிவிளம்பிப் போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும் பூரணசற் குருதாள்கண் டாடாய் பாம்பே. | 12 |
| | |
உள்ளங்கையிற் கனிபோல உள்ள பொருளை உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக் கள்ளமனந் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க் சுளித்துக் களித்துநின் றாடாய் பாம்பே. | 13 |
| | |
அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வஸ்துவை அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச் சங்கையறச்சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே தமனியப் படமெடுத் தாடாய் பாம்பே. | 14 |