காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டுபின் கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும் தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின் துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே. | 15 |
| | |
கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கை யுடைய குருவின் வல்லபமெவர் கூற வல்லவர் வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும் மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே. | 16 |
| | |
அட்டதிக்கும் அண்டவெளி யான விடமும் அடக்கிய குளிகையோ டாடி விரைவாய் வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின் மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே. | 17 |
| | |
கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங் கடமழி யாதுவாழுங் காரணக்குரு பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே. | 18 |
| | |
வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்கு மாயினும் வல்லுடம்புக் கோர் குறை வாய்த்தி டாது மெச்சகட முள்ள வெங்கள் வேத குருவின் மெல்லடி துதித்துநின் றாடாய்பாம்பே. | 19 |
| | |
பாம்பினது சிறப்பு நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே பாடிப்பாடி நின்றுவிளை யாடு பாம்பே. | 20 |
| | |
வளைபுகும் போதேதலை வாங்கும் பாம்பே மண்டலமிட் டுடல்வளை வண்ணப் பாம்பே தளைக்கஞ்சி நின்றிடும் சத்தியப் பாம்பே தலையெடுத் தேவிளையாடு பாம்பே. | 21 |