அனந்தனை யொருபக்க மாக நிறுத்தி அதன்பக்கங் குளிகனை யண்டச் சேர்த்துக் கனங்கொண்ட கார்க்கோடகன் காணக் காட்டுங் கடுஞ்சங்க பாலனைத்தான் சித்த னாரே. | 36 |
| | |
அட்டதிக்குஞ் சக்கரங் களாகக் கீறி அக்கோண நிலைகளி லக்கரஞ் சேர்த்துத் திட்டமுடன் மந்திரத்தைச் செபித்து நில்லும் சித்தந்தடு மாறாதீர் சித்த னாரே. | 37 |
| | |
அட்டதிக்குஞ் சக்கரங்க ளமைத்து விட்டோம் அவ்வவற்றிற் சக்கரங்க ளமைத்து விட்டோம் எட்டுநாக மிருக்கின்ற இடத்தில் விட்டோம் இனியென்ன செய்வம்சொல்லும் சித்த னாரே. | 38 |
| | |
நடுவாக ஆதிசேடன் றன்னைநாட்டும் நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும் கடுவிஷங் கக்கவேயக் கட்செ விகளைக் கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே. | 39 |
| | |
பொருளாசை விலக்கல் நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடி வருமோ கூடுபோன பின் பவற்றாற் கொள்பய னென்னோ கூத்தன் பதங் குறித்துநின் றாடாய் பாம்பே. | 40 |
| | |
யானைசேனை தேர்ப்பரி யாவு மணியாய் யமன்வரும் போதுதுணை யாமோ அறிவாய் ஞானஞ்சற்று மில்லாத நாய்கட் குப்புத்தி நாடிவரும் படிநீநின் றாடுபாம்பே. | 41 |
| | |
மாணிக்கமா மணிமுடி வாகு வலயம் மார்பிற்றொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள் ஆணிப் பொன்முத் தாரமம் பொன் அந்தகடகம் அழிவானபொருளெனநின் றாடாய் பாம்பே. | 42 |