மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும் மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும் கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும் கழறாமற் கடிந்தோமென் றாடாய் பாம்பே. | 57 |
| | |
பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும் பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும் கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும் கூறாமல் துறந்தோம்நாமென் றாடாய் பாம்பே. | 58 |
| | |
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும் மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும் சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும் தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே. | 59 |
| | |
சரீரத்தின் குணம் ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே உதிரப் புனலினிலே உண்டை சேர்த்தே வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம் வறகோட்டுக்கு மாகாதென் றாடாய் பாம்பே. | 60 |
| | |
இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையா யிருப்பினு மந்தச் சூளை அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே. | 61 |
| | |
பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேரறியவே மெத்த வீங்கிப் பரியார மொருமாது பார்த்த போது பையோடே கழன்றதென் றாடாய் பாம்பே. | 62 |
| | |
சீயுமல முஞ்செறி செந் நீரும் நிணமுஞ் சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது உடைந்தால் நாயுநரி யும்பெரிய பேயுங் கழுகும் நமதென்றே தின்னுமென் றாடாய் பாம்பே. | 63 |