நீரிலெழும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்றனைப் பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே. | 64 |
| | |
நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால் நாளுங்கழு வினுமதன் நாற்றம் போமோ கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால் கொண்ட மலம் நீங்காதென் றாடாய் பாம்பே. | 65 |
| | |
காய்த்தமர மதுமிக்க கல்லடிப்படும் கன்மவினை கொண்டகாயம் கண்டனை பெறும் வாய்த்ததவ முடையவர் வாழ்பவ ரென்றே வத்துத்திரு வடிதொழு தாடாய் பாம்பே. | 66 |
| | |
பேசரிய நவவாயிற் பீற்றல் துருத்தி பெருங்காற்றுள் புகுந்ததாற் பேச்சுண் டாச்சே ஈசனிலை அறியாருக் கிந்தத் துருத்தி எரிமண்ணிற் கிரைமென் றாடாய் பாம்பே. | 67 |
| | |
மரப்பாவை போல வொரு மண்ணுருச் செய்து வளமான சீவனென்னுஞ் சூத்திரம் மாட்டித் திரைக்குள்ளி ருந்தசைப்போன் தீர்ந்த பொழுதே தேகம்விழு மென்றுதெளிந் தாடாய் பாம்பே. | 68 |
| | |
தசநாடி தசவாயு சத்த தாது சார்ந்தமரக் கப்பலது தத்தி விழுமே இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில் எந்நாளும் ஓட்டத்துணிந் தாடாய் பாம்பே. | 69 |
| | |
அகப்பற்று நீக்கல் தாமரையி னிலையினிலே தண்ணீர் தங்காத தன்மைபோலச் சகத்தாசை தள்ளி விட்டெங்கும் தூமணியாம் விளங்கிய சோதி பதத்தைத் தொழுது தொழுதுதொழு தாடாய்பாம்பே. | 70 |