கள்ளங் கொலை காமமாதி கண்டித்த வெல்லாம் கட்டறுத்து விட்டுஞானக் கண்ணைத் திறந்து தெள்ளிதான வெட்டவெளி சிற்சொ ரூபத்தைத் தேர்ந்துபார்த்துச் சிந்தைதெளிந் தாடாய் பாம்பே. | 71 |
| |
சொல்லும்புளி யம்பழத்தி னோடு போலவே சுற்றத்திருந் தாலுமவர் தொந்தங் களற்று நில்லுமன மேநீபர நின்ம லத்திலே நின்றுணைதான் வெறும்பாழென் றாடாய் பாம்பே. | 72 |
| |
சேற்றில் திரிபிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல்போல் தேசத்தோ டொத்துவாழ்வார் செய்கை கண்டபின் சாற்றுபர வெளிதனைச் சாரும் வழியே தானடக்க வேணுமென் றாடாய் பாம்பே. | 73 |
| |
எண்ணெய்குந் தண்ணீர்க்குந் தொந்தமில்லா வாறுபோல் எப்போதும் இப்புவியி லெய்த வேண்டும் கண்ணுக்குக் கண்ணான வொளிகண்டு கொள்ளவே கட்டறுத்து வாழ்ந்திடநின் றாடாய் பாம்பே. | 74 |
| |
கக்கிவிட்ட சோறுகறி கந்த மூலங்கள் கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே சிக்கிக்கொண்ட சகத்தினைச் சீயென் றொறுத்துச் சீர்பாதங் காணத்தெளிந் தாடாய் பாம்பே. | 75 |
| |
கோபமென்னும் மதயானை கொண்ட மதத்தை கூர்கொள்யுத்தி அங்குசத்தாற் கொன்று விட்டோங்காண் தீபமென்னுஞ் சிற்சொரூப செய்ய பொருளைச் சேர்ந்துறவு கொண்டோமென் றாடாய் பாம்பே. | 76 |
| |
நித்தியமென் னுமலையில் நின்று கொண்டோம்யாம் நினைத்தபடியே முடித்து நின்மல மானோம் சத்தியமாய் எங்கள் கடந்தானழி யாதே சந்ததமும் வாழ்வோமென் றாடாய் பாம்பே. | 77 |
| |
மனமென்னுங் குதிரையை வாகன மாக்கி மதியென் னுங்கடிவாளம் வாயிற் பூட்டிச் | |