சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித் தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே. | 78 |
| |
ஆசையென்னுஞ் செருப்பின்மேல் அடிமை வைத்தே ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே காசையெனுந் துர்குணத்திற் கனலைக் கொளுத்திக் காலாகாலங் கடந்தோமென் றாடாய் பாம்பே. | 79 |
| |
காலனெனுங் கொடிதான கடும்ப கையைநாம் கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம் தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம் தற்பரங் கண்டோமென் றாடாய் பாம்பே. | 80 |
| |
தேனில் வீழ்ந்த ஈயைப்போலச் சிந்தை குலைந்து திகையாமற் சிற்சொரூப தெரிச னைகண்டு வானிற் பறந் திடச்சூத வான்ம ணிதீர்ந்து வாயிற்போட் டேகநீநின் றாடாய் பாம்பே. | 81 |
| |
தூக்கியநற் பாதங்கண்டேன் சோதியும் கண்டேன் சுத்தவெளிக் குள்ளேயொரு கூத்தனைக் கண்டேன் தாக்கிய சிரசின்மேல் வைத்த பாதம் சற்குருவின் பாதமென் றாடாய் பாம்பே. | 82 |
| |
ஆலடிப் பொந்தினிலே வாழ்ந்த பாம்பே அரசடிப் பொந்திலே புகுந்து கொண்டாய் வாலடி தன்னிலே பார்த்துப் பார்த்து வாங்கியே தூங்கிநின் றாடாய் பாம்பே. | 83 |
| |
நாலு தெருவினிலே நாலு கம்பம் நடுத்தெரு வினிலேயோ பொன்னுக் கம்பம் போலும் விளங்குபொன்னுக் கம்பத்தி னுக்கே பூமாலை சூட்டிநின் றாடாய் பாம்பே. | 84 |
| |
ஆழிபெயர்ந் தாலுமேரு மட்டேயலையும் அடியோடு பெயர்ந்தாலு மன்றிக் கால ஊழிபெயர்ந்து தாலுமதி யுண்மைப் படிக்கே உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே. | 85 |