வாயுவினை இரையாக வாங்கி உண்டே வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே தேயுபிறை குளிர்காய்ந்து வெட்ட வெளியில் திகைப்பறச் சேர்ந்துநின் றாடாய் பாம்பே. | 86 |
| |
மாசில்கதி வளையிலே மண்டல மிட்டே மதியான பெரும்பட மடலை விரித்தே ஆசில்பரா பரமான ஆதி பாதத்தை அடுத்தடுத் தேதுதித் தாடாய் பாம்பே. | 87 |
| |
காடுமலை நதிபதி காசி முதலாய்க் கால்கடுக்க ஓடிப்பலன் காணலாகுமோ வீடுபெறும் வழிநிலை மேவிக்கொள்ளவே வேதாந்தத் துறையினின் றாடாய் பாம்பே. | 88 |
| |
எள்ளளவும் அன்பகத்தில் இல்லா தார்முத்தி எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே கள்ளப்புலன் கட்டறுத்துக் கால காலனைக் கண்டு தொழுதேகளித் தாடாய் பாம்பே. | 89 |
| |
சூரியனைக் கண்டபனி தூர வோடல்போல் சொந்தபந்தஞ் சிந்தபரி சுத்த தலத்தில் ஆரியனைக் கண்டுதரி சித்தே யன்புடன் அகலாமற் பற்றித் தொடர்ந் தாடாய் பாம்பே. | 90 |
| |
காந்தம்வலி யிரும்புபோல் காசில் மனத்தைக் காட்சியான வஸ்துவுடன் கலக்கச்சேர்த்துச் சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போலச் சலியாமற் தொடர்ந்து நின் றாடாய் பாம்பே. | 91 |
| |
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி புளியிட்ட செம்பிற்குற்றம் போமோ அஞ்ஞானம் போகாது மூடருக்கென் றாடாய் பாம்பே. | 92 |
| |
திரளான போரிலூசி தேடல் போல்முத்தி சிக்காது தேசாசார தேசிகர் தம்மால் | |